ஏரல் தெரசாள் பள்ளிக்கு மின்விசிறி வழங்கும் விழா

ஏரல், டிச. 28:  ஏரல் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் 1992-93ம் ஆண்டு 8ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு 6 மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது.  பள்ளித் தாளாளர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சார்லஸ் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்து வரவேற்றார். இதைத்தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் மரியதங்க ஜெகதீஸ், முத்துக்குமார், முருகேசன், பாலமுருகன், சுப்பிரமணியன், ஐயப்பன், ரமேஷ், முகமதுஅலி, ராமர், வீரா, ராமகிருஷ்ணன், கோபால் உள்ளிட்டோர் பள்ளிக்கு மின்விசிறிகள் வழங்கினர்.

Related Stories: