திருச்சி, டிச. 28: திருச்சி மாநகரில் நேற்றுமுன்தினம் காலை 6 மணிமுதல் நேற்று காலை 6 மணிவரையிலான 24 மணிநேர ‘ஸ்ட்ராமிங் ஆபரேசன்’ நடத்தியதில் 2,700க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. திருச்சிக்கு முதல்வர் வருகை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிமுதல் நேற்று அதிகாலை 6 மணிவரை ஸ்ட்ராமிங் ஆபரேஷன் நடத்த மாநகர கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகரில் உள்ள 7 காவல் சோதனை சாவடிகள் மற்றும் மாநகரில் உள்ள 14 சட்டம், ஒழுங்கு காவல் நிலைய போலீசார் தங்கள் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை மற்றும் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், ஓட்டல்கள், லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.