ஊட்டி, டிச.28: ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையோர நடைபாதைகளில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களால் சுற்றுலா பயணிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில், சுற்றுலா பயணிகள் சாலையோர நடைபாதையையே பயன்படுத்துகின்றனர். இதுமட்டுமின்றி, உள்ளூர் மக்கள் பலர் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.