திருவில்லிபுத்தூர், டிச. 27: மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருவில்லிபுத்தூர் பகுதியில் வண்ண கோலப்பொடி தயாரித்து, விற்பது தீவிரமடைந்துள்ளது. மார்கழி மாதத்தில் அதிகாலையில் வீட்டு வாசல்களில் வண்ண கோலமிடுவது தமிழகத்தில் பிரசித்தம். இதையொட்டி வண்ண கோலப்பொடி தயாரிப்பு தொழிலில் ஏராளமானோர் இறங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் பகுதியில் குடிசைத்தொழில் தயாரிப்பாக அதிகளவில் வண்ண கோலப்பொடி தயாரிப்பு நடக்கிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து வண்ண கோலப்பொடி அனுப்பி வைக்கப்படுகிறது.