ஆண்டிமடம்,டிச.27: விவசாயத்திற்கு என பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் புதிது புதிதாக உருவெடுத்து வந்த பொழுதும் மரபு மாறாமல் பாரம்பரிய முறைப்படி ஏர் கலப்பை கொண்டு விவசாயிகள் கடலை விதைப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் ஏர் கலப்பை கொண்டு பாரம்பரிய மரபு முறைப்படி கடலை விதைப்பு செய்யும் விவசாயிகள். மாடுகளை கட்டி ஏர் ஓட்டி விதைப்பு செய்தால் மட்டுமே அதிக அளவில் கடலை விளைச்சல் வருவதாக விவசாயிகள் பெருமிதம். இதுகுறித்து பெரியாத்துகுறிச்சி கிராமத்தை சேர்ந்த விவசாயி குமார் என்பவர் கூறும்போது, தற்போது கட்டளை விவசாயம் செய்வதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு இயந்திரங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் அதன் மூலம் விவசாயம் செய்யும் பொழுது போதிய அளவில் மகசூல் இல்லை எனவும் மேலும் மனதிற்கான ஒரு வெற்றி கிடைக்கவில்லை.