வத்தலக்குண்டு, டிச. 25: வத்தலக்குண்டுவில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் தந்தை பெரியார் 48வது நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரியாரின் படத்திற்கு மாலையிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு கட்சியின் நில மீட்பு இயக்க மாநில துணைச்செயலாளர் உலகநம்பி தலைமை வகித்தார். மதிமுக நகர செயலாளர் வால்டர் ராஜா, ஆட்டோ பெரியார் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரைவீரன், அல்லாப்பிச்சை. அலாவுதீன். காட்டு ராஜா. ராஜ்வளவன். தங்க முருகன். அழகு ராஜா. கருப்பு. வக்கீல், கலந்து கொண்டனர்.