விராலிமலை, டிச. 25: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான வேலைவாய்ப்பு முகாம் விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய இம்முகாம் மாலை 5 மணிவரை நடைபெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். இதில் 273 பேர் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்திருந்தனர் அதில் 58 பேர் வேலைவாய்ப்பு பெற்றனர். இதில் 45 பேர்களுக்கு உடனடி பணி நியமன ஆணை வழங்கப்பட்டது