ஜெயங்கொண்டத்தில் கிராம உதவியாளர் சங்க கூட்டம்

ஜெயங்கொண்டம்,டிச.25: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக அரியலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் ஜெயங்கொண்டம் வாசவி திருமணமண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார். கிராம உதவியாளர்களுக்கு சிபிஎஸ் திட்டம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பெருந்திரள் முறையீடு சென்னை சிஆர்ஏ அலுவலகம் முன்பாக வரும் ஜனவரி 7ம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. அதில் அரியலூர் மாவட்டத்தின் சார்பாக அனைத்து கிராம உதவியாளர்களும் கலந்து கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் கணபதி நிறைவுரை ஆற்றினார். வட்ட பொருளாளர் நன்றி கூறினார். அனைத்து கிராம உதவியாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories: