கடலூர், டிச. 25: கடலூர் அருகே உள்ள உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லலிதா(57). நேற்று பாலசுப்பிரமணியனின் பிறந்தநாள் என்பதால், இருவரும் நேற்று காலை கோயிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். கடலூர் அண்ணா பாலம் அருகே சென்றபோது, தேவனாம்பட்டினத்தில் இருந்து கடலூர் பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு பேருந்து இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்தனர். அப்போது பேருந்தின் பின்பக்க டயர் லலிதாவின் மீது ஏறி இறங்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலசுப்பிரமணியன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.