கோவில்பட்டி கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு

கோவில்பட்டி, டிச. 24:கோவில்பட்டி சொர்ணா கல்லூரியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். கோவில்பட்டி சொர்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா, ஆண்டு விழா கல்லூரி வளாத்தில நடந்தது. சொர்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை வகித்தார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, பொறியாளர் சந்தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி பேராசிரியை சங்கரேஸ்வரி வரவேற்றார். விழாவை முன்னிட்டு கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான  கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். சாகித்திய அகடாமி விருது பெற்ற சூல் நாவலாசிரியரும், எழுத்தாளருமான சோ தர்மன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சொர்ணா கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா, கோவில்பட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் முத்து முருகன் உள்பட கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியை திலகவதி நன்றி கூறினார்.

Related Stories: