கொடைக்கானல், டிச.23: கொடைக்கானல் சிறுமி மர்மச்சாவு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராமமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான சாலையில் ஏரிக்கு அருகில் மாணவியின் உறவினர்கள் மற்றும் மேல்மலை கிராமத்தை சேர்ந்த கிராமமக்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம் செய்தனர். கொடைக்கானல் ஆர்டிஓ டாக்டர் முருகேசன், டிஎஸ்பி சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி
னர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து சாலை மறியல் போராட்டம் செய்தவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதேபோல் கொடைக்கானல் மூஞ்சிக்கல் மற்றும் ஏரி அருகே போராட்டம் நடத்தியவர்களும் அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நடந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.