ஜெயங்கொண்டம், டிச.22: ஜெயங்கொண்டம் அருகே உத்திரகுடி கிராமம் சிவன் கோயில் அருகே ஆழ்வார் மகன் செந்தாமரைக் கண்ணன் (52)கூலி தொழிலாளி, நேற்று இரவு எதிர்பாராத விதமாக மின்கசிவால் கூரை வீடு தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவலறிந்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர்.