சிறுமியை கடத்திய வழக்கில் போக்சோவில் கைதான இளைஞருக்கு குண்டாஸ்

விராலிமலை, டிச.20: சிறுமியை கடத்திய வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. விராலிமலையில் கடந்த அக்.22ம் தேதி 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் கண்ணன்(30) என்பவரை விராலிமலை போலீசாரால் கைது செய்து போக்சோ சட்டத்தில் திருமயம் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து திருமயம் கிளை சிறையில் இருந்த கண்ணனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: