பெரம்பலூர்,டிச.18: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி துவக்கியது. இதில் கலெக்டர் வெங்கட பிரியா, எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையில் 2021-2022ம் ஆண்டுக்கான கரும்பு அரவைப்பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் வெங்கட பிரியா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியும் மாவட்ட வருவாய் அலுவலருமான ரமேஷ் வரவேற்றார். தலைமை கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணை தலைமை ரசாயனர் பெரியசாமி, துணை தலைமை பொறியாளர் (பொ) நாராயணன், கணக்கு அலுவலர் ஜான்பிரிட்டோ, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி மற்றும் பொறியியல், ரசாயண பிரிவு, கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.