ஆறுமுகநேரி ,டிச.17: ஆறுமுகநேரியில் திருப்பாவை, திருவெம்பாவை பஜனை வீதிஉலா 3 கோயில்களில் நேற்று தொடங்கியது. ஆறுமுகநேரியில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருப்பாவை, திருவெம்பாவை பஜனை வீதிஉலா நேற்று காலை கோயில்களில் தொடங்கியது. பொங்கல் திருநாளான தை மாதம் 1ம்தேதி வரை தினசரி காலையில் பஜனை வீதிஉலா நடக்கிறது. ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் நடராஜர் ஆலயத்தில் நேற்று அதிகாலையில் நடராஜர், விநாயகர், மாணிக்கவாசகர் மற்றும் ஏனாதி நாயனாருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதனைதொடர்ந்து திருப்பாவை, திருவெம்பாவை வீதி பாராயண பஜனை உலா தொடங்கியது. பக்த ஜன சேவை செயலாளர் ராமச்சந்திரன், பூஜகர் வேலாயுதம் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்றனர்.