காளையார்கோவில், டிச.6: காளையர்கோவிலில் உள்ள மதுரை-தொண்டி நெடுஞ்சாலை 202ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு இருவழிச் சாலையாக உள்ளது. தற்போது காளையார்கோவில் பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டே போவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. காளையார்கோவில் பஸ் நிலையத்தில் இருந்து கல்லல், காரைக்குடி திரும்பும் வளைவு மற்றும் போலீஸ் ஸ்டேசன், பரமக்குடிக்கு திரும்பும் வளைவுகளில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகின்றன.