சுசீந்திரம், டிச.16: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் மார்கழி திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 3ம் திருவிழாவன்று இரவு மக்கள் மார் சந்திப்பு நடந்தது. 4ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு பூதவாகனத்தில் சுவாமி திருவீதியுலா, இரவு 10.30 மணிக்கு பரங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வருதல் ஆகியவை நடந்தது. 5ம் திருவிழாவான நேற்று அதிகாலை 5 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும், பஞ்சமூர்த்தி தரிசனமும் நடந்தது. தொடர்ந்து 6 மணிக்கு கருட தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் தாணுமாலயன் சுவாமி கோயில் அருகே உள்ள வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு கிழக்கு நோக்கி எழுந்தருளினர்.