சிவகங்கை, டிச.15: சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐடிஐ.யில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐ முதல்வர் முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் 2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடைபெற்றது. தற்போது ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர்(கோபா), வெல்டர், ஆடை தயாரித்தல் ஆகிய பிரிவுகளில் சேரலாம்.