கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு 10ம் வகுப்பில் 117 மாணவர்கள் படித்தனர். இந்த மாணவர்கள் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முன்னாள் மாணவர்கள் அமைப்பை ஏற்படுத்தி தங்கள் நட்பை வளர்த்துக்கொண்டனர். தொடர்ந்து இவர்கள் கே.எல்.கே. அரசு மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு படித்த 25வது ஆண்டை நினைவு கூறும் வகையில் அனைவரும் ஒன்று கூட முன்னெடுத்தனர். இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டியில் தனியார் மண்டபத்தில் 117 முன்னாள் மாணவர்கள் அவர்களது குடும்பத்தாரோடு ஒன்றுகூடி நெடுநாள் கழித்து இந்த சந்திப்பை ஒரு திருவிழாவைப்போல் கொண்டாடினர். பின்னர் முன்னாள் மாணவர்களின் குடும்பத்தாருக்கு முன்னாள் மாணவர்கள் குழு சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.