ஜெயங்கொண்டம், டிச.14: ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் செவிலியர் வீட்டில் பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் 5வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் மாணிக்கம் மகன் பழனிசெல்வன் (55). இவரது மனைவி புனிதா. இவர் மன்றத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி அன்று சென்னையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று காலையில் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள் புனிதாவின் வீடு முன் கதவு, பின்புற கதவு அறைக்கதவுகள் அனைத்தும் திறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக பழனி செல்வன் புனிதாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். நேற்று மாலை வீட்டிற்கு வந்த பழனி செல்வன் வீட்டில் உள்ள அனைத்து பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.