துறையூர், டிச.9: துறையூர் அருகே காரும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேராக மோதியதில் முதியவர் பலியானார்.
எதுமலையைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம்(65), குழந்தைவேலு(65). இவர்கள் இருவரும் குடிபாட்டு கோயில் உலோக சிலைகளை புதுப்பிக்க வேண்டி அதே ஊரைச் சேர்ந்த சகாதேவன் என்பவரின் ஆட்டோவை எடுத்துக்கொண்டு தா.பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்துக்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பினர். இவர்கள் கரட்டாம்பட்டியிலிருந்து புத்தனாம்பட்டி வழியாக எதுமலைக்கு சென்றுகொண்டிருந்தபோது எதிர் திசையிலிருந்து வந்த கார் மோதியது. இதனால் ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.