துறையூர் அருகே கார், ஆட்டோ மோதல் முதியவர் பரிதாப பலி

துறையூர், டிச.9: துறையூர் அருகே காரும், ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேராக மோதியதில் முதியவர் பலியானார்.

எதுமலையைச் சேர்ந்தவர்கள் ராஜலிங்கம்(65), குழந்தைவேலு(65). இவர்கள் இருவரும் குடிபாட்டு கோயில் உலோக சிலைகளை புதுப்பிக்க வேண்டி அதே ஊரைச் சேர்ந்த சகாதேவன் என்பவரின் ஆட்டோவை எடுத்துக்கொண்டு தா.பேட்டை அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்துக்கு சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பினர். இவர்கள் கரட்டாம்பட்டியிலிருந்து புத்தனாம்பட்டி வழியாக எதுமலைக்கு சென்றுகொண்டிருந்தபோது எதிர் திசையிலிருந்து வந்த கார் மோதியது. இதனால் ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

இதில் ராஜலிங்கம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து இவரது உடலை புலிவலம் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து சோபனபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் அபுதாஹீரிடம்(26) விசாரித்து வருகின்றனர். விபத்தில் காயமடைந்த ஆட்டோவில் பயணித்த மற்றொரு பயணி குழந்தைவேலு மற்றும் ஆட்டோ டிரைவர் சகாதேவன் ஆகிய இருவருக்கும் துறையூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories: