சின்னாண்டாங்கோவில் பகுதியில் சேறு சகதியான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், டிச. 9: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பகுதியில் வாய்க்கால் பகுதியோரம் செல்லும் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பகுதியின் வழியாக அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்கள் செல்கிறது. இதில் ஒரு பகுதி சாலை தொடர் மழையின் காரணமாக நடந்து செல்லக்கூட முடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக உள்ளது. பல்வேறு குடியிருப்புகளுக்கு செல்லும் மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையை விரைந்து சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: