பொன்னமராவதி, டிச.9: பொன்னமராவதி அருகே ஆலவயலில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. புதுக்கோட்டை அறிவியல் இயக்கம் சார்பில் கலைபயண குழுவினரின் 9ம் நாளான நிகழ்ச்சி ஆலவயலில் நடைபெற்றது.ஊராட்சி மன்றதலைவர் சந்திரா சக்திவேல் தலைமை வகித்தார். ஆலவயல் தொடக்கபள்ளியில் கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் மற்றும் நாடகம் ஆகிய கலைகளை கொண்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வியில் தன்னார்வலராக சேர்வது பற்றியும் அதன் நோக்கம் பற்றியும் நடித்து காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.இதேபோல் ஆலவயல் கலையரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விவேகானந்தர் பள்ளி தாளாளர் மாதவன் கலைக்குழுவினருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.