சிவகாசி, டிச. 8: சிவகாசி அருகே விஸ்வநத்தம் பழையூரை சேர்ந்தவர் குமார் (25). மதுரை ஓட்டலில் வேலை பார்த்து வந்த இவர், அங்கு வாங்கிய சம்பளத்தை கொடுக்காததால் தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த குமார், வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.