ஈரோடு, டிச. 8: ஈரோடு சென்னிமலை ரோடு காசிபாளையம் அரசு ஐடிஐக்கு எதிரே டாஸ்மாக் கடையும், பாரும் செயல்பட்டு வருகிறது. பாரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை செலுகை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பூபாலன் (26) மற்றும் அபிமன்யு, வீரசேகர், பிரவீன் உள்ளிட்டோர் வேலை செய்து வருகின்றனர். கடந்த 5ம் தேதி இரவு டாஸ்மாக் கடை மூடிய பின், பாரில் பூபாலன் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் ஊழியர்கள் வரவு செலவு கணக்கு பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் பாருக்கு வந்த ஈரோடு கே.கே.நகரை சேர்ந்த சங்கர், கார்த்தி, சூர்யா, மற்றொரு நபர் என 4 பேர் மது கேட்டுள்ளனர். ஆனால், பாரில் விற்பனை செய்வது இல்லை என பூபாலன் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து 4 பேரும் தகாத வார்த்தையால் பேசி பூபாலனை கைகளால் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளனர்.