புதுக்கோட்டை, டிச.8: புதுக்கோட்டை, மௌண்ட் சீயோன் இண்டர்நேஷனல் (சிபிஎஸ்இ) பள்ளியில் ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் பல்வேறு திருச்சபைகளிலிருந்து திரளானோர் கலந்து கொண்டனர். போதகர் சாம்கிருபாகரனின் இறைவழிபாடு மற்றும் கிறிஸ்துமஸ் பாடலோடு நிகழ்ச்சி இனிதே துவங்கியது. மௌண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் டாக்டர் ஜெ.ஜோனத்தன் சிறப்பு விருந்தினரான சகோதரர் ஜாபேஸ் ஜிக்கோ மற்றும் போதகர் சகாயராஜ் ஆகியோரை வரவேற்றார். மௌண்ட் சீயோன் பள்ளிகளின் துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பல்வேறு ஊழியங்களின் தலைவர்கள் மற்றும் போதகர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். போதகர் சகாயராஜ் அவர்களால் விவிலியத்திலிருந்து இறைவார்த்தை வாசிக்கப்பட்டது.