புதுக்கோட்டை, டிச.8: புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாது, தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து பொதுமக்களிடமும் போலீஸ் அதிகாரிகள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். பாலியல் குற்றங்கள் தொடர்பாக பிரச்சினைகள் வந்தால் உடனடியாக பெற்றோர்கள் இடத்திலும் ஆசிரியர்கள் இடத்திலும் அல்லது போலீஸ் அதிகாரிகள் இடத்திலும் பிரச்சனைகளை கூற வேண்டும்.