காஞ்சிபுரம், டிச.8: காஞ்சிபுரம் அடுத்த பாலுச்செட்டி சத்திரம் அருகே டிப்பர் லாரி மீது தொழிற்சாலை பஸ் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான ஊழியர்கள், 3 ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்கின்றனர். அனைவரும், கம்பெனி பஸ் மூலம் வீட்டில் இருந்து அழைத்து வந்து, மீண்டும் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 2வது ஷிப்ட் முடிந்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 ஊழியர்கள் பஸ் கம்பெனி மூலம் வீட்டுக்கு புறப்பட்டனர். சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுச்செட்டி சத்திரம் அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.