ஊட்டி, டிச. 7: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சி துவங்கியுள்ளது.தடை செய்யப்பட்ட மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிரான ஒருவார கால விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் துவங்கியது.மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று விழிப்புணர்வு போஸ்டர்களை வெளியிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை 01.01.2019 முதல் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கருதி பிளாஸ்டிக் பை, கப்பு, டம்ளர், பிளாஸ்டிக் கரண்டி, முலாம் பூசப்பட்ட காகித தட்டு, பிளாஸ்டிக் வாழை இலை, தோரணங்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.