திருப்பரங்குன்றம், டிச. 7: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை துணைபதிவாளர், துணை பதிவாளர், கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர பணியில் உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற முறையற்ற நிர்வாகத்தால், பல்கலைக்கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.