காதல் திருமணம் செய்தவர் மாயம்

சிவகாசி, டிச.7: சிவகாசி அருகே சாமிபுரம் காலனியை சேர்ந்தவர் ராமசந்திரன். போஸ் காலனியை சேர்ந்தவர் சுகபிரியா(19). இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் ராமச்சந்திரன், தனது தங்கையின் திருமணத்திற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார்  வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Related Stories: