போடி, டிச.6: போடி சாலையில் ஒரே நேரத்தில் குழாய் பதிக்கும் பணி, சாலை போடும் பணி நடைபெற்றதால் ேபாக்குவரத்து பாதிக்கப்பட்டது. போடி நகராட்சி குப்பிநாயகன்பட்டி கியாமியான் கோயிலில் இருந்து சுப்புராஜ் நகர் வஞ்சி ஓடை மற்றும் ரயில்வே சாலை வழியாக நேற்று முன்தினம் தார்ச்சாலை போடும் பணி நடைபெற்றது. அதே சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு பொக்லைன் இயந்திரத்தால் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. ஒரே நேரத்தில் ஒரே சாலையில் இரண்டு பணிகள் நடந்ததால் ேபாக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.