போடி, டிச.6: போடியை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சில்லமரத்துபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், போடி உதவி வேளாண்மை துறையும், சமூக ஆர்வலர் பசுமை முருகன் ஆகியோர் இணைந்து பனை விதைகள், வேம்பு, புளி, நாவல், கொய்யா போன்றவற்றின் 5 ஆயிரம் விதை பந்துகளை தயார் செய்து ஆங்காங்கே நட்டு வைத்தும், வீசியும் வருகின்றனர். போடி அருகே டொம்புச்சேரி கெப்பணக்கவுண்டர் ஊரணி குளக்கரை முழுவதும் நேற்று விதைப்பந்து நடப்பட்டது.