புகையிலை விற்ற 2 பேர் கைது

ஈரோடு, டிச. 6: ஈரோடு மாவட்டம் பெருமாள்மலை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.  சித்தோடு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், பெருமாள்மலை பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள டீ கடையில் மேற்கொண்ட சோதனையில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதை உறுதி செய்து, கடையின் உரிமையாளரான கணபதி நகரை சேர்ந்த குமார் என்ற கட்டை குமார்(39) என்பவரை போலீசார் கைது செய்து, விற்பனைக்கு வைத்திருந்த குட்கா, புகையிலை என 23 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், கோபி வாய்க்கால் ரோட்டில் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக நெல்லை சாமுவேல் கடை உரிமையாளரான  வேதமுத்து சாமுவேல்(26) என்பவரை கோபி போலீசார் கைது செய்தனர்.

Related Stories: