பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் விபரீத பயணம்

சேத்தியாத்தோப்பு, டிச. 6:   சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரை சாலையில் பூதங்குடி பேருந்து நிறுத்தத்தின் அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஆபத்தை உணராமல் கிராமப்புற பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இதுபோன்று மாணவர்கள் பேருந்துகளின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வது வாடிக்கையாக உள்ளது. மேலும், இதனால் ஏற்படும் விபரீதம் என்னவென்று தெரிந்தும் பந்தாவுக்காக பயணம் செய்கின்றனர். பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு பேருந்தில் அனுப்பும் போது உரிய அறிவுரைகளை கூறி எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும். சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகமும் மாணவர்களிடம் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றனர். எனவே சம்பந்தபட்ட போக்குவரத்து அதிகாரிகள் மாணவர்களின் அலட்சிய போக்கை கருதாமல் அலட்சியத்துடன் பேருந்தை இயக்கும் நடத்துனர், ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: