மனவளர்ச்சி குன்றியோருக்கான ஜூடோ விளையாட்டு போட்டி

ெநல்லை, டிச. 6: பாளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கான ஜூடோ விளையாட்டு போட்டி நடந்தது. நெல்லை மாவட்ட ஸ்பெஷல் ஒலிம்பிக் பாரத் தமிழ்நாடு சார்பாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில்  மனவளர்ச்சி குன்றியோருக்கான மாநில அளவிலான ஜூடோ போட்டி நடந்தது. போட்டியை தமிழ்நாடு ஏரியா டைரக்டர் பிரசன்ன பாலாஜி துவக்கி வைத்தார். டாக்டர் பிரிட்டோ அலெக்சாண்டர் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், ஜூடோ சங்க செயலாளர் ஜெகமோகன் ஆகியோர் பங்கேற்று போட்டியில் பங்கேற்றவர்களை வாழ்த்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.

Related Stories: