ஆர்எஸ்.மங்கலம் சீனாங்குடியில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு

ஆர்எஸ்.மங்கலம், டிச. 5: ஆர்எஸ்.மங்கலம் அருகே சீனாங்குடி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் ராதிகா பிரபு தலைமை வகித்து, துவக்கி வைத்தார்.  இத்திட்டத்தின் சார்பில் மலர்கள் என்ற கலைக்குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு எளிதாக புரியக்கூடிய வகையில்  பாடங்கள், கலை, கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை கொண்டாட்டத்துடன் ஆடல், பாடல், நடனங்களுடன் தொகுத்து வழங்கினர். இதில் பிச்சங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் நாகமுத்து, பள்ளியின் தலைமையாசியர் சுமதி, ஆசிரியர் அனிதா, ஊராட்சி  செயலாளர் சிலம்பரசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: