ஈரோடு, டிச. 5: ஈரோட்டில் அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்தது, மழை நீர் உள்ளே கொட்டியதால் பயணிகள் அவதியடைந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை பரவலான மழை பெய்தது. இதில், ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து கொடுமுடி வரை இயக்கப்படும் அரசு டவுன் (எண்:43) பஸ் நேற்று வழக்கம்போல் கொடுமுடியில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. பஸ்சின் மேற்கூரை ஏற்கனவே சேதம் அடைந்திருந்ததால், அப்போது பெய்த மழையின் காரணமாக மழை நீர் பஸ்சின் உட்புறத்தில் கொட்டியது.