அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை சேதம் மழை நீர் உள்ளே கொட்டியதால் பயணிகள் அவதி

ஈரோடு, டிச. 5: ஈரோட்டில் அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை சேதம் அடைந்தது, மழை நீர் உள்ளே கொட்டியதால் பயணிகள் அவதியடைந்தனர்.ஈரோடு  மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை பரவலான மழை பெய்தது. இதில்,  ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து கொடுமுடி வரை இயக்கப்படும் அரசு  டவுன் (எண்:43) பஸ் நேற்று வழக்கம்போல் கொடுமுடியில் இருந்து ஈரோடு நோக்கி  வந்து கொண்டிருந்தது. பஸ்சின் மேற்கூரை ஏற்கனவே சேதம் அடைந்திருந்ததால்,  அப்போது பெய்த மழையின் காரணமாக மழை நீர் பஸ்சின் உட்புறத்தில் கொட்டியது.

பஸ்சில் பயணித்த பயணிகள் வேறு வழியில்லாமல் பஸ்சுக்குள் நனைந்தபடியும்,  சிலர் குடைகளை பிடித்தப்படியும் பயணித்தனர். அரசு போக்குவரத்துக்கழக  அதிகாரிகள் உடனடியாக இந்த பஸ் மட்டும் அல்லாது அனைத்து பஸ்சுகளையும் ஆய்வு  செய்து, சேதங்களை சரி செய்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள்  கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: