நெல்லை, டிச. 4: நெல்லை சந்திப்பு பகுதியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நெல்லை டவுன் வயல் தெரு முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பாண்டி மகன் முத்தையா (40). இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.