சொர்ணலதாவை வீட்டுக்கு அழைத்து சென்று, நகை திருடியது எப்படி? என்பதை நடித்து காட்ட கூறினர். அதன்படி நடித்து காட்டிய சொர்ணலதா, ஏற்கனவே புஷ்பத்தின் வீட்டில் சங்கீதாவின் நகைகள் இருப்பது தனக்கு தெரியும் என்றும், அவர்கள் மருத்துவமனைக்கு சென்ற பின் அவர்களை தேடி வந்த நிலையில் கதவு திறந்து கிடந்ததால், நகைக்கு ஆசைப்பட்டு உள்ளே புகுந்து திருடி விட்டதாக கூறினார். மழை பெய்து கொண்டிருந்ததால், ஆள் நடமாட்டமும் இல்லாமல் இருந்தது. இதனால் எளிதில், வீடு புகுந்து நகையை திருடி விட்டு அந்த நகையை தனது வீட்டின் பிரிட்ஜ் அடியில் பதுக்கி வைத்திருந்தார். அந்த நகைகளை போலீசார் மீட்டனர்.