கும்பகோணம், டிச.4: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு வருகிற 5ம்தேதி 3வது ஞாயிறு தீர்த்தவாரி விழா நடக்கிறது. 7ம் தேதி தன்னைத்தான் அருச்சித்தல் நிகழ்ச்சியும், மாலை ஓலைசப்பரமும், அதனைத் தொடர்ந்து 9ம்தேதி மாலை திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது.