வேதாரண்யம் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 1 ஆசிரியை, 9 மாணவ, மாணவிகள் உயிரிழந்த 12ம் ஆண்டு நினைவஞ்சலி

வேதாரண்யம், டிச.4: வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ, மாணவிகள் 1 ஆசிரியை உள்பட 10 பேர் உயிரிழந்த 12ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி வேன் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தனர். இந்நிலையில் நாகக்குடையான் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அருகே 12ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: