ஜெயங்கொண்டம் அருகே வீட்டில் நிறுத்தியிருந்த 2 பைக்குகள் திருட்டு

ஜெயங்கொண்டம், டிச.2: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர்கோவில் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் தனசேகரன் (28). இவர் கடந்த 28ம்தேதி இரவு மழை பெய்து கொண்டிருந்ததால் தனது பைக்கை அருகில் உள்ள சித்தப்பா தங்கதுரை வீட்டில் அவரது பைக்குடன் தனது பைக்கையும் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். காலை 5 மணி அளவில் தனது சித்தப்பா வீட்டில் நிறுத்தி இருந்த பைக்கை எடுக்க சென்ற போது அங்கு இருந்த 2 பைக்குகளும் காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி எஸ்ஐ கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து 2 பைக்குகளையும் திருடிய மர்ம நபர்களை ேதடி வருகிறார்.

Related Stories: