அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

பாபநாசம்,ஏப்.23: பாபநாசம் தீயணைப்பு, மீட்பு பணி நிலையம் சார்பில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீ தடுப்பு தொடர்பான செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன், தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். இதில் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Related Stories: