88 ேபருக்கு கொரோனா முதியவர் பலி பாதிப்பு எண்ணிக்கை 16,136 ஆக உயர்வு

ஈரோடு, ஏப்.14:  ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 117 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், மாவட்டத்தில் நேற்று புதிதாக 88 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,136 ஆக உயர்ந்துள்ளது.  தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 69 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். 624 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தொற்றால் ஏற்கனவே 150 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நாராயணவலசு பகுதியை சேர்ந்த 79 வயது முதியவர் கடந்த 8ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இரண்டரை மாதத்திற்கு பிறகு கொரோனாவால் முதியவர் உயிரிழந்துள்ளதையொட்டி, மாவட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: