திருக்காட்டுப்பள்ளி,ஏப் 14: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பெரியார்புரம் பெருமாள் மகன் உமாபதி(36). இவர் நால்ரோடு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் (12ம் தேதி) வியாபாரம் முடித்து கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று (13ம் தேதி) காலை கடையை திறந்து பார்த்தபோது கடையில் இருந்த பணப்பெட்டி திறந்து கிடந்தது.