ஊட்டி,ஏப்.13: நீலகிரி மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மார்ச் மார்ச் முதல் வாரம் வரை 5 முதல் 10 பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை துவங்கியுள்ள நிலையில், நீலகிரியில் தற்போது 35 பேர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இதனால் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை சுமார் 30 சதவீதம் அதாவது 2.50 லட்சம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.