முசிறி,ஏப்.13: தா.பேட்டை அருகே எம்.புதுப்பட்டி ஊராட்சியில் 100நாள் வேலை திட்டப்பணியாளர் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தா.பேட்டை ஊராட்சி ஒன்றியம் எம்.புதுப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் வரத்துவாரி, தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்படுகிறது . இப்பணியில் ஈடுபட்டுள்ள கூலி தொழிலாளர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.