ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

தா.பேட்டை ,ஏப்.13: தா.பேட்டை அருகே வீரமச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (35). இவர் துறையூரில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது வீட்டில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த கண்ணதாசன் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் கண்ணதாசன் தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: