பெரம்பலூர்,ஏப்.13: பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் 16ம் தேதி நடக்கிறது. இது குறித்து சங்க தலைவர் ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் வருகிற 16ம்தேதி வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணிக்கு எறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னாறு பகுதியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கடந்த பிப்ரவரி 1ம்தேதி முதல் வெட்டிய கரும்புக்கு தர வேண்டிய பாக்கித் தொகை குறித்து அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்கவும், அது சம்பந்தமாக கூட்டத்தில் முடிவெடுக்கவும், அனைத்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் 16ம்தேதி காலை, 10-30 மணிக்கு பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன் வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.